நரிக்குறவர் மக்களுக்கு உதவிய எல்ஐசி
திருநெல்வேலி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நரிகுறவர் மக்களுக்கு என்எல்சி நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
Update: 2024-01-07 05:52 GMT
நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் எல்ஐசி முதல் நிலை அதிகாரிகள் சங்கம் சார்பில் மூன்று லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 200 நரிக்குறவர் இன மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பேட்டை நரிக்குறவர் காலனியில் வைத்து நடைபெற்றது. எல்ஐசி முதல் நிலை அதிகாரிகள் சங்க தலைவர் அண்ணாதுரை செயலாளர் முத்துக்குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டு வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினர்.