விளையாட்டு அரங்கத்தில் கட்டண வசூலுக்கு தடை - த.வா.க கோரிக்கை

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பயிற்சிக்கு வரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை தடை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2024-03-07 02:59 GMT
தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணை தலைவர் சோ. சுரேஷ்

தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை தலைவர் சோ.சுரேஷ் விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்தாவது.    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில்  பயிற்சிக்காக  குழந்தைகள் முதல்  பல பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள்  பயிற்சிக்கு வருவது வழக்கம்.  இங்கு விளையாட்டிற்கும் தனி தனியாக கட்டணம் செலுத்த தினமும் வாசலிலும் பயிற்சி செய்யும் பகுதிகளுக்கும் தேடி சென்று இடைமறித்து ஒவ்வொருவரையும் கட்டணம் செலுத்த நிர்ப்பந்திக்கப்படுகிறது. 

இதனால் பலர் விளையாட்டு அரங்கத்திற்கு வருவதை தவிர்க்க தொடங்கி உள்ளனர். இதனால் பல திறமையான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உருவாவது தடுக்கப்படுகிறது. பலருக்கு பயிற்சிக்கு வர மன உழைச்சலை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு  அரசு சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளை திறம்பட நடத்தி தேசத்திற்கே முன்மாதிரியாக விளங்கும் வேளையில்  மாவட்ட விளையாட்டு நிர்வாகத்தின் இந்த வசூல்  பணியானது தமிழக அரசிற்கு பொதுமக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்துவதாக உள்ளது.

ஆகையால் விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி மேற்கொள்ள வரும் எழை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு தடையாக இருக்கும் கட்டாய கட்டண வசூலை தடை செய்ய வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கேட்டு கொள்கிறேன் இவ்வாறு  மாவட்ட நிர்வாகத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை தலைவர் சோ.சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News