வழங்கப்படாத இழப்பீடு - சிப்காட்டை முற்றுகையிட முடிவு

பெருந்துறை சிப்காட்டிற்கு அரசால் கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்கள் சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Update: 2024-01-04 04:16 GMT

சிப்காட் 

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் சிப்காட் தொழில் வளர்ச்சி மையம் அமைப்பதற்காக, தமிழ்நாடு அரசின் தொழில் துறை பெருந்துறை மற்றும் ஈங்கூர் கிராமத்தில் 2709 ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் இருந்து அரசால் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்புப் படியான இழப்பீட்டுத் தொகைகளை உடனடியாக வழங்க கோரிக்கை பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினருடன் ஜனவரி 23 ம் தேதி பெருந்துறை சிப்காட் அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News