வடக்குத்து: தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை
வடக்குத்து பகுதியில் தெரு மின் விளக்கை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
Update: 2024-02-12 06:44 GMT
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்குத்து ஊராட்சியில் உள்ள என்ஜெவி நகரில் உள்ள பூங்கா அருகில் தெரு மின் விளக்கு எரியாமல் அப்பகுதியில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது. இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.