திண்டிவனத்தில் அதிமுக எம்எல்ஏ பேச்சால் சிரிப்பலை

திண்டிவனத்தில் அதிமுக எம்எல்ஏ பேச்சால் சிரிப்பலை ஏற்பட்டது

Update: 2024-02-16 13:11 GMT

கூட்டத்தில் பேசும் எம்எல்ஏ

திண்டிவனம் நகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி வி சண்முகம் தலைமையில் இன்று திண்டிவனம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அப்போது வரவேற்று பேசிய,

திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜீனன் கட்சியின் அமைப்பு செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான செஞ்சி ராமச்சந்திரனை கொள்கை பரப்பு செயலாளர் என தவறாக குறிப்பிட்டதால் சிரிப்பலை எழுந்தது.

மேலும் வானூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணியை மாநிலங்களவை உறுப்பினர் என உளறி கொட்டியதால் கட்சியினர்மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதால் கூட்டத்தினர் திடீரென கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News