விழுப்புரம் : நாதக வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்

Update: 2024-03-27 11:25 GMT

வேட்புமனு தாக்கல் 

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார் பில் வேட்பாளராக திரைப்பட இயக்குனர் களஞ்சியம் போட்டியிடுகிறார். இவர் விழுப்புரம் புறவழிச்சாலையில் இருந்து கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு தேர்தல் அலுவலகமான மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து, அங்கிருந்த தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் சி.பழனியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அவரது வேட்பு மனுவை 10 பேர் முன்மொழிந்தனர். அதன் பிறகு வெளியே வந்த வேட்பாளர் களஞ்சியம், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தன்னை வெற்றி பெறச்செய்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருகிற வகையில் தொழிற்சாலைகளை உருவாக்கி தர நடவடிக்கை எடுப்பேன். வேண்டுமென்றே மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சதிவேலைகளை செய்து நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை பறித்துள்ளது. இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன் என்றார்.

Tags:    

Similar News