இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு என் டி ஆர் எஃப் வீரர்கள் உறுதிமொழி ஏற்பு

அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்பு வீரர்கள் ரத்த தான தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Update: 2024-06-15 02:26 GMT

உறுதிமொழி ஏற்பு 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை வளாகத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு இன்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தொடர்ச்சியாக தேசிய பேரிடர் மீட்பு படை மருத்துவ குழு மூலம் அரக்கோணம் பகுதியில் உள்ள கிராமப்புற மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Tags:    

Similar News