அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சரி கார்டன்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களின் பார்வைக்காக சுமார் 1.10லட்சம் மதிப்பீட்டில் நர்சரி கார்டன் மற்றும் புத்தர் சிலை நிறுவப்பட்டது.

Update: 2024-05-23 13:38 GMT
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களின் பார்வைக்காக சுமார் 1.10லட்சம் மதிப்பீட்டில் நர்சரி கார்டன் மற்றும் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்து நிறுவப்பட்டது.மே 23 உலக புத்தர் தினம் உலகம் முழுதும் அனுஷ்காரிக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு இன்று கெளதம புத்தரின் 2586வது பிறந்த தினத்தை முன்னிட்டு, விருதுநகரில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களின் பார்வைக்காக புதிதாக 1.10லட்சம் மதிப்பீட்டில்அமைக்கப்பட்டுள்ள நர்சரி கார்டனில் கெளதம புத்தர் சிலை மருத்துவ கல்லூரி முதல்வர் சீதாலட்சுமி தலைமையில் பிரிதிஷ் டை செய்து நிறுவப்பட்டது மேலும் இந்த நிகழ்வின் போது துணை முதல்வர் அனிதா, நிர்வாக அலுவலர் முருகேசன் . உதவி நிர்வாக அலுவலர் முரளிதரன் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்
Tags:    

Similar News