நர்சிங் மாணவி மாயம்

புதுக்கோட்டை மாவட்டம், ராங்கியத்தில் நர்சிங் மாணவி மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-29 11:46 GMT

மாயம்

திருமயம் அருகே ராங்கியத்தை சேர்ந்தவர் அழகர்சாமி மகள் ஜெயா(19). புதுக்கோட்டையில் உள்ள தனியார் நர்சிங் கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி சென்ற வர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது செல் போனும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இதுபற்றி அவரது தாயார் அளித்த புகாரின்பேரில் பனையப் பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News