காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கும் நிகழ்ச்சி

காச நோயாளிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் ஊட்டச்சத்து உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-06-06 07:50 GMT

காச நோயாளிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் ஊட்டச்சத்து உணவு வழங்கும் நிகழ்ச்சி அம்மாபாளையம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது . பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோயாளிகளுக்கு, விழிப்புணர்வு . மற்றும் ஊட்டச்சத்து உணவு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் ஜூன் ஐந்தாம் தேதி நடைபெற்றது .

இதில் வட்டார மருத்துவ அலுவலர் சூர்யகுமார் மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு மருத்துவ அலுவலர் முல்லை வேந்தன் , சில்ட்ரன் சாரிடபிள் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ மோகன் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு காச நோய் பற்றிய விழிப்புணர்வுஅனைவருக்கும் வழங்கினார்கள், மேலும் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் ஏற்பாடு செய்திருந்தார்.

Tags:    

Similar News