நாகர்கோவிலில் போதை பாக்கு விற்ற கடைக்கு சீல் .

புகார் எழுந்த நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை

Update: 2023-12-06 07:30 GMT
சீல் வைத்த கடை
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பாக்கு விற்பனை ஆங்காங்கு நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி சங்கரநாராயணன், வடசேரி போலீஸ் சப்-  இன்ஸ்பெக்டர் ஜெஸி மேனகா மற்றும் அதிகாரிகள் தலைமையில் நேற்று போஸ்ட் ஆபீஸ் அருகில் உள்ள பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினர்.      

இதில் அந்தப் பகுதியில் கோபால் என்பவரது  கடையில் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு,  போதை பாக்கு  பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.        கோபால் மீது ஏற்கனவே போதை பாக்கு விற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து அதே தவறை செய்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்து, கடைக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News