புத்தக திருவிழா - அதிகாரிகள் ஆய்வு

ஜனவரின் 2ம் தேதி புத்தக திருவிழா தொடங்கவுள்ளது

Update: 2023-12-22 02:09 GMT

புத்தகத் திருவிழா நடக்கும் இடத்தை எம்எல்ஏ ஆய்வு செய்தார்

தென்காசி மாவட்ட 2ஆவது பொதிகை புத்தகத் திருவிழா சங்கரன்கோவில் பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 24) தொடங்கி ஜன. 2ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளது. நாள்தோறும் மாலை 5 மணிமுதல் இரவு 10 மணி வரை இலக்கிய ஆளுமைகள், எழுத்தாளா்கள், பேச்சாளா்கள் பங்கேற்றுப் பேசுகின்றனா். பட்டிமன்றங்கள், மாணவா்கள், நாட்டுப்புற கிராமியக் கலைஞா்களின் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. புத்தகத் திருவிழாவுக்காக மேடை, பந்தல், மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளை எம்எல்ஏ ராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் பத்மாவதி, கோட்டாட்சியா் சுப்புலட்சுமி, வட்டாட்சியா் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
Tags:    

Similar News