சேலம் தாதகாப்பட்டியில் பூட்டிய வீட்டுக்குள் மூதாட்டி பிணம்

சேலம் தாதகாப்பட்டியில் பூட்டிய வீட்டுக்குள் மூதாட்டி பிணம். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.

Update: 2024-07-04 09:32 GMT

 மூதாட்டி பிணம்

சேலம் தாதகாப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு 5-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 80). இவர் அஸ்தம்பட்டியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மேலும் கடந்த 2 நாட்களாக வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மூதாட்டியின் வீட்டுக்கு சென்றனர். பின்னர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ராஜேஸ்வரி இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. மேலும் அவரது உடலில் வெட்டுக்காயங்கள், தூக்குப்போட்டு கொண்டதற்கான அறிகுறிகள் போன்ற எதுவும் தென்படவில்லை. எனவே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா?, அல்லது வேறு எதாவது காரணமா?, என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில் தான் அவர் இறந்ததற்கான முழு காரணங்கள் தெரியவரும். மேலும் அவரது மகள் செங்கல்பட்டில் வசித்து வருவதாகவும், அவர் வந்தால் இது குறித்து மேலும் விவரங்கள் தெரிய வரும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News