பேருந்து மோதி விபத்து-முதியவர் பலி

கோயம்புத்தூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே தனியார் பேருந்து மோதி குடிநீர் பணியாளர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-08 08:32 GMT

விபத்தில் பலி 

பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கேட் நம்பர் 4க்கு எதிர் திசையில் சைக்கிளில் வந்த குடிநீர் பணியாளர் கிருஷ்ணசாமி (75) என்பவர் கோவையில் இருந்து வந்த தனியார் பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த வித்யாலய மேடு என்ற பகுதி பாலிடெக்னிக் எதிர்ப்புறம் உள்ள அபாயம் மிகுந்த பகுதியாக உருவாகியுள்ளதாகவும் மாணிக்கவாசக நகரில் இருந்து வருவோர் எதிர்ப்புறம் வருவதும் வித்யாலயத்தின் உள்ளே இருந்து கோவை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலைக்கு வாகன ஓட்டுநர்கள் கடக்க முயல்வதும் மேம்பாலாத்திலிருந்து வரும் வாகனங்கள் அதி வேகத்தில் வந்து விபத்துகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

போக்குவரத்து போலீசார் இப்பகுதியில் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News