மின் கம்பியை மிதித்த முதியவர் பலி

திருவாரூர் அருகே பேரளத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த முதியவர் பலி.

Update: 2023-10-28 07:32 GMT

முதியவர் பலி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவாரூர் அருகே பேரளம் கூத்தனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் விவசாய தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர் அதிகாலை தெருவில் நடந்து சென்ற பொழுது தெருவிளக்கு மின்கம்பி அறுந்து கிடந்ததை கவனிக்காமல் தனது காலால் எதிர்பாராத விதமாக மிதித்து விட்டார். இதனால் மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பேரளம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பேரளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News