கட்டுபாட்டை இழந்த இருசக்கர வாகனம்- முதியவர் படுகாயம்
கரூர் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் டூவீலரில் வேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கீழே விழுந்ததில் முதியவர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
இருசக்கர வாகனம் விபத்து
கரூர் அருகே உள்ள ஆத்தூர், நொச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி வயது 63. இவர் பிப்ரவரி 14ஆம் தேதி மாலை 6:45 மணி அளவில், ஆத்தூரில் இருந்து நானபரப்பு செல்லும் சாலையில், அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் அப்பகுதியில் உள்ள BPCL பைப் லைன் அருகே சென்று கொண்டிருந்தபோது, டூவீலரை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் கிருஷ்ணமூர்த்திக்கு தலை, இடது கால் முட்டி, வலது கால் விரல்கள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அறிந்த கிருஷ்ணமூர்த்தியின் மருமகன் சசிகுமார் வயது 41 என்பவர் இது குறித்து வாங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை அதிவேகமாக இயக்கியதால் கீழே விழுந்து விபத்து ஏற்படுத்திய கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.