பஸ் மோதி முதியவர் பலி!
அரசு பஸ் மோதியதில் முதியவர் பலி.போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-02 05:02 GMT
பஸ் மோதி முதியவர் பலி போலீசார் விசாரணை
விராலிமலை ஒன்றியம் வேலுார் காலனி தெருவை சேர்ந்தவர் ராமன்(74). நேற்று காலை விராலிமலை சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு செல்ல டவுன் பஸ்சில் ஏறி டிவிஎஸ் பஸ் நிறுத்தத்தில் இறங்கி தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றார். அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக ராமன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.