திருவண்ணாமலையில் பேருந்து மோதி முதியவர் பலி
திருவண்ணாமலையில் மொபட்டின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-29 12:35 GMT
கோப்பு படம்
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஓம்சக்தி நகரை சேர்ந்த மணி (வயது 70) என்பவர் திருவண்ணாமலை நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக சென்ற தனியார் பேருந்து திடீரென மொபட்டின் மீது மோதியதில் ,தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.