சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் புதன்கிழமை 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

Update: 2024-02-29 14:25 GMT
தீர்ப்பு

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட அணக்குடி தோட்டத் தெருவைச் சேர்ந்தவர் தங்கையன் (68). இவர் 2022 ஆம் ஆண்டில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பாலியல் வல்லுறவு செய்தார்.

இது குறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து தங்கையனைக் கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி.சுந்தர்ராஜ் விசாரித்து தங்கையனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News