நிறுத்தி இருந்த டிராக்டர் மீது டூ வீலர் மோதி முதியவர் படுகாயம்

டிராக்டர் மீது டூ வீலர் மோதி முதியவர் படுகாயம் -டிராக்டர் உரிமையாளர் ஆறுமுகத்தின் மீது வழக்கு

Update: 2024-02-15 08:57 GMT
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், லந்தக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சங்கப் பிள்ளை வயது 64. இவர் பிப்ரவரி 12ஆம் தேதி இரவு 8 மணி அளவில், அவரது டூவீலரில் கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் எல்லைக்குட்பட்ட சேங்கல்- உப்பிடமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் ராசாகவுண்டனூர் பகுதியில் உள்ள கார்த்திக் வீடு அருகே செல்லும்போது, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், கடைக்காரன் பாளையம் அருகே உள்ள ராஜாத்தி கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் வயது 68 என்பவர், நிறுத்தி இருந்த டிப்பருடன் கூடிய டிராக்டரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சங்கப் பிள்ளைக்கு இடது கால், இடது கை, மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சங்கப்பிள்ளை அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். டிராக்டரை நிறுத்தும்போது, நிறுத்தம் செய்வதற்கான சிக்னல்கள் எதுவும் வெளிப்படாததால், சங்கப் பிள்ளை ஓட்டிச் சென்ற டூவீலர் டிராக்டரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. எனவே, இது குறித்து டிராக்டர் உரிமையாளர் ஆறுமுகத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Tags:    

Similar News