திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இல்லம்தோறும் ஸ்டாலின் குரல் தின்னை பிரச்சாரம்

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணை பிரச்சாரத்தை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.

Update: 2024-02-25 08:37 GMT
திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் “இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்” திண்ணை பிரச்சாரம். மாவட்டக் கழக செயலாளர், க.செல்வராஜ் எம்.எல்.ஏ., திண்ணை பிரச்சாரத்தை துவக்கி வைத்து, வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர், ஸ்டாலின் தலைமையில் எதிர்வரும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 23.02.2024 அன்று நடைபெற்றது. அதில் மாவட்டக் கழக செயலாளர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள், முக்கிய நிர்வாகிகள் காணொலி வாயிலாக இதில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய மாண்புமிகு முதலமைச்சர், “இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, ஒன்றிய பாஜக அரசின் அநீதிகள், கழக அரசின் சாதனைகள், தமிழக பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கி திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியிருந்தார்..அதனை தொடர்ந்து திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி, நல்லூர் பகுதி கழகம், 46-வது வட்டக் கழகத்தில் இன்று திருப்பூர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர், செல்வராஜ் M.L.A., திண்ணை பிரச்சாரத்தை துவக்கி வைத்து, வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.இந்நிகழ்வில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி மு‌‌‌.நாகராசன், வடக்கு மாநகர செயலாளர் மேயர் ந.தினேஷ்குமார், மண்டலத் தலைவர் சி.கோவிந்தசாமி, பகுதி செயலாளர் மேங்கோ பழனிசாமி, மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பகுதி அவைத்தலைவர் தம்பி குமராசாமி, வட்டக் கழக செயலாளர் பத்திரன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ம.சூர்யா, துரை.ரவிச்சந்திரன், கலைச்செல்வி, ஆனந்தி, மற்றும் கழக நிர்வாகிகளும், மகளிர் அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News