அமமுக சார்பில் டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைபெற்றது.
நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர்
Update: 2023-12-14 01:08 GMT
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் முன்னிட்டு, டிசம்பர் - 13ம் தேதி பெரம்பலூர் அமமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையில், ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர். கார்த்திகேயன் உட்பட அமமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் பேர் ரத்ததானம் வழங்கினார்கள். இந்த ரத்ததான முகாம் நிகழ்ச்சியில் அமமுக மாவட்ட துணை செயலாளர் பீமா ரஞ்சித் குமார் ஒன்றிய செயலாளர்கள் பெரம்பலூர் ஜெயக்குமார், வேப்பந்தட்டை சேகர், வேப்பூர் நாகராஜ்,செந்துறை காரல் மார்க்ஸ் , மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அருண்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இளவரசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கலைவாணன், பொறியாளர் அணி செயலாளர் மதுபாலன், வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் நீதி ராஜா, விவசாயப் பிரிவு செயலாளர் கதிரேசன், குன்னம் சட்டமன்ற பொதுக்குழு உறுப்பினர் அருண்குமார், இளைஞர் அணி செயலாளர் மணிவேலன், மற்றும் அமமுக தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.