கரூர் அருகே தனியார் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்

கரூர் அருகே சாலையை கடக்க முயன்றவர் மீது, தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2024-01-06 12:26 GMT

காவல் நிலையம் 

 கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் வயது 45. இவர் ஜனவரி 3ஆம் தேதி இரவு 9 மணி அளவில், திருமாநிலையூர் வி.கே.ஆர்.வேபிரிட்ஜ் அருகே சாலையை கடந்து செல்வதற்காக நடந்து சென்றுள்ளார்.

அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த விகேஏ தனியார் பேருந்து, நடந்து சென்ற பாண்டியன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தலை மற்றும் இரண்டு கால்களில் பலத்த காயமடைந்த பாண்டியனை தனியார் ஆம்புலன்ஸ் மூலம், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தாந்தோணிமலை கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட தாந்தோணி மலை காவல்துறையினர், வேகமாக பேருந்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய,

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், நல்லமனார் கோட்டை பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல் துறையினர்.

Tags:    

Similar News