திண்டிவனம் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி

திண்டிவனம் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலியானார்.

Update: 2023-12-25 09:06 GMT
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் வெள்ளையன் என்கிற யோகராஜ் (வயது 38). பெயிண்டிங் காண்ட்ராக்டர். சம்பவத்தன்று இவர் நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் உளுந்தூர்பேட்டை செல்வதற்காக சாரம் பஸ் நிறுத்தத்திற்கு சென்றார். அப் போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாக னம் ஒன்று யோகராஜ் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது, இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒலக்கூர் போலீசார் யோகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News