சிதம்பரத்தில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இளைஞர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-01-06 10:02 GMT
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வி. கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் கையெழுத்திட்டுள்ளார். அதனை தொடர்ந்து அருகே உள்ள ரயில்வே பாதையை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் எஸ். ஐ அருணா தலைமையில் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.