விருதுநகர் சிவகாசி சாலையில் இருசக்கர வாகனம் மீது ஒருவர் பலி

Update: 2024-01-03 05:28 GMT
விசாரணை 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா சேர்வைக்காரன் பட்டியைச் சார்ந்தவர் சுப்ரமணியன். இவர் தனது மனைவி முத்துலட்சுமி மற்றும் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி இவர் வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் விருதுநகர் சிவகாசி சாலையில் லைன்ஸ் எதிரே உள்ள சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது 407 வேனை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒட்டி வந்து சுப்ரமணியன் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் சுப்பிரமணியன் கீழே விழுந்து காயம் ஏற்பட்ட நிலையில் அருகில் இருப்பவர்கள் அவரை மீட்டு திருத்தங்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதையும் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி சுப்பிரமணியன் மனைவி முத்துலட்சுமி அழைத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News