ஆலங்குடி அருகே நாய் கடித்ததில் ஒருவர் பலி
ஆலங்குடி அருகே நாய் கடித்ததில் ஒருவர் பலியானர்.
By : King 24X7 News (B)
Update: 2024-07-02 12:23 GMT
அரசு மருத்துவமனை
ஆலங்குடி அருகே நம்பன்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கர் (42). டிரைவரான இவரை நாய் கடித்துள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாய் கடித்து இறந்ததால், தஞ்சாவூரில் உள்ள பொது மயானத்தில் பாஸ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.