சித்தேரி அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

அன்வர்த்திகான் பேட்டை- சித்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-22 11:48 GMT

தலைமை மருத்துவமனை

அன்வர்த்திகான் பேட்டை- சித்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் சித்தேரி ரயில் நிலைய மேலாளர் பவன்குமார் புகார் அளித்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் புஷ்பா வழக்குப்பதிவு செய்து,

பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.இறந்து கிடந்தவருக்கு 40 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊர் என்பது தெரிய வில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News