டூவீலர்கள் மோதல்- ஒருவர் படுகாயம்

கரூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-05-02 14:56 GMT

விபத்தில் ஒருவர் படுகாயம்

கரூர் மாவட்டம் ,மணவாடி, கத்தாழைப்பட்டி அருகே உள்ள கன்னியமார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் வயது 54. இவர் ஏப்ரல் 30ஆம் தேதி காலை 7:30 மணியளவில், தாந்தோணி மலையில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் அவரது எலக்ட்ரிக் டூ வீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் தாந்தோணி மலை நம்பர் ஒன் மாவு கடை அருகே சென்றபோது, அதே சாலையில், கரூர், வடக்கு காந்திகிராமம், பாரதியார் தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் கௌதம் வயது 24 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், மகாலிங்கம் ஓட்டி சென்ற எலக்ட்ரிக் டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் மகாலிங்கத்துக்கு இடது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மகாலிங்கம் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கௌதம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News