புதிய மனநல காப்பகம் திறப்பு

பழனியில் ரூ.67.95 லட்சத்தில், கூடுதல் வசதிகளுடன் கூடிய மனநல காப்பகத்தை அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்தார்.

Update: 2024-02-05 05:20 GMT

காப்பகம் திறப்பு 

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்தை ரூ.67.95 லட்சத்தில், கூடுதல் வசதிகளுடன் கூடிய மனநல காப்பகத்தை அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ரூ.25.59 லட்சத்தில் மலைக்கோயிலுக்கு செல்லும் யானைப் பாதையில் - இடும்பன் கோயில் அருகிலுள்ள தற்காலிக முதலுதவி சிகிச்சை மையத்தை அகற்றி நிரந்தர கட்டிடத்தையும் திருக்கோயிலில் 200 கிராம் பஞ்சாமிர்தம் உற்பத்தி மற்றும் விற்பனையையும் புதிதாக துவக்கி வைத்தார். இந்நிகழ்வின்போது திருக்கோயில் உதவி ஆணையர் உள்ளிட்ட அறநிலையத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News