வானாபுரத்தில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு !

ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வாணாபுரத்தில் தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

Update: 2024-03-30 04:48 GMT

தேர்தல் அலுவலகம் திறப்பு விழா

ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வாணாபுரத்தில் தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், அசோக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் அண்ணாதுரை, நிர்வாகி சாமி சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, அரியலுார் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, அமைச்சர் வேலு முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். புதிதாக கட்சியில் இணைந்த நபர்களுக்கு அமைச்சர் வேலு சால்வை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் மலையரசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
Tags:    

Similar News