செய்யாறு மார்க்கெட் பகுதியில் நியாய விலை கடை திறப்பு

செய்யாறு நகராட்சி மார்க்கெட் பகுதியில் நியாய விலை கடை 12.50 லட்சம் மதிப்பில் எம்எல்ஏ ஓ ஜோதி திறந்து வைத்தார்.

Update: 2024-01-14 15:24 GMT

நியாய விலை கடை திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு 23 வது வார்டு பகுதியில் 12.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நியாயவிலை கடை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்ட வழங்கல் அலுவலர் சங்கீதா தலைமை தாங்கினார்.

நகரமன்ற தலைவர் மோகனவேல் முன்னிலை வகித்தார்.செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ ஜோதி ரிப்பன் வெட்டி திறந்து வழங்கினார்.

உடன் நகர மன்ற உறுப்பினர்கள் ரமேஷ்.கார்த்திகேயன், ராஜேஸ்வரி அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News