வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு

வெம்பாக்கம் அருகே ரூ.30.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Update: 2024-02-29 03:32 GMT

திறப்பு விழா 

செய்யாறு அருகே வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பெருங்கட்டூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை துறை சார்பில் தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை பொது நிதியிலிருந்து 30 லட்சத்து 80, ஆயிரம் மதிப்பீட்டில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

அதே சமயம் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதிகலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து கட்டிடத்தை பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர்  ராஜு ஒன்றிய குழு உறுப்பினர்கள் சத்யா பக்தன், ஜெயந்தி பிரகாசம் மற்றும் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Tags:    

Similar News