சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், அரகண்டநல்லூரில் புதிதாக கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2024-02-19 08:02 GMT

சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு 

அரகண்டநல்லுார் சார் பதிவாளர் அலுவலகம் 1.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட சார் பதிவாளர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார்.

சார் பதிவாளர் அன்பிற்கரசன் வரவேற்றார். திருக்கோவிலுார் நகர மன்ற தலைவர் முருகன், அரகண்டநல்லுார் பேரூராட்சி சேர்மன் அன்பு, மாவட்ட கவுன்சிலர் பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News