திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகம் திறப்பு

திருப்பூர் மாநகராட்சி முருகம்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நான்காவது மண்டல அலுவலகத்தை அமைச்சர்கள் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.

Update: 2024-01-08 07:45 GMT

மண்டலா அலுவலகம் திறப்பு

திருப்பூர் மாநகராட்சி முருகம்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி நான்காவது மண்டல அலுவலகத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு. பெ. சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி கயல்விழிசெல்வராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார்,மாநகராட்சி 4 -வது மண்டலதலைவர் இல. பத்மநாபன், மாநகராட்சி ஆணையர் பவன்குமார்ஜிகிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News