பாஜக சார்பில் கருத்து கேட்பு பெட்டி !

கருத்து கேட்பு பெட்டியின் முலம் கருத்துக்களை எழுதி போடலாம் என்று பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-11 14:37 GMT
பைல் படம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பரமக்குடி முதுகுளத்தூர் திருவாடானை திருச்சுழி அறந்தாங்கி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பாஜக சார்பில் பாராளுமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு நாடு முழுவதும் ஒரு கோடி பேரிடம் தேர்தல் அறிக்கைக்கான கருத்து சேகரிக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து முக்கிய இடங்களில் தேர்தல் அறிக்கை குறித்த பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை கேட்பதற்கான பெட்டிகள் வைக்கப்படும் என்றும் , பொதுமக்கள் தங்களது பகுதிக்கான தேவை மற்றும் கோரிக்கைகள் குறித்து அந்தப் பெட்டிகளில் கருத்துக்களை எழுதி போடலாம் என்றும் , இது குறித்து தகவல்களை சேகரிக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு வாகனங்கள் செல்ல இருப்பதாகவும் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News