செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு !

இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் ராகவன் என்பவரது இடத்தில் புதிய செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு நகர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Update: 2024-04-11 05:17 GMT

 டவர் 

திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட குருநகர் மற்றும் குரு தட்சிணாமூர்த்தி நகர் பகுதியில் இரண்டு செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் ராகவன் என்பவரது இடத்தில் புதிய செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு நகர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் குறிப்பாக அதிகமான செல்போன் டவர் அமைக்கப்படுவதால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உடல் நலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் எனவே வேறு பகுதியில் செல்போன் டவர் அமைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நீதிமன்ற உத்தரவுபடி தற்போது பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி நகர் பகுதி முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News