கால்வாய் கட்டுவதற்கு எதிர்ப்பு - ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கால்வாய் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-10 15:16 GMT

பணிகள் தடுத்து நிறுத்தம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை கீழ்பாத்தி கண்மாயில் கழிவுநீர் கலக்கும் வகையில் கழிவுநீர் கால்வாய் கட்டப்படுவதால் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சிவகங்கை - இளையான்குடி ரோட்டில் உள்ளது கீழ்பாத்தி கண்மாய்.இந்த கண்மாய் மூலம் 100 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

அருகிலுள்ள இந்திரா நகர் பகுதி வீடுகளில் உள்ள கழிவுநீர் செல்ல புதியதாக கால்வாய் கட்டும் பணி நடக்கிறது. இதற்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மக்கள் கூறுகையில், இந்த பகுதி வீடுகளில் பயன்படுத்தக்கூடிய கழிவுநீர் செல்ல கால்வாய் கட்டப்படுகிறது. கால்வாயில் வரும் கழிவுநீர் கண்மாயில் சேர வாய்ப்புள்ளது.

கண்மாயில் கழிவுநீர் கலந்தால் நீரை மக்கள் பயன்படுத்த முடியாது. கண்மாயில் உள்ள மீன்களுக்கும் கண்மாய் நீரை குடிக்கும் கால்நடைகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே வாணியங்குடி ஊராட்சி நிர்வாகம் கீழ்பாத்தி கண்மாயில் கழிவுநீர் கலக்கும் வகையில் கட்டப்படும் கால்வாயை நிறுத்த வேண்டும் என கூறுகின்றனர்.

Tags:    

Similar News