சுற்றித் திரியும் குரங்குகளை பிடிக்க உத்தரவு

பள்ளத்தூரில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடிக்க வனத்துறைக்கு பேரூராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2024-07-01 10:07 GMT

 பள்ளத்தூரில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடிக்க வனத்துறைக்கு பேரூராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் பேரூராட்சி பகுதியில் சுற்றி திரியும் குரங்குகளால் வீடுகளில் பொதுமக்கள் வாழவே அச்சப்படுகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ரோட்டில் நடமாடவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளத்தூர் பேரூராட்சியில் திரியும் குரங்குகளை பிடித்து வனத்துறையில் விடக்கோரி பள்ளத்தூரை சேர்ந்த ரவி மற்றும் ஆனந்தன் ஆகியோர் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் மனு அளித்தனர். அதை ஏற்ற பேரூராட்சி செயலர் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறையினரிடம் மனு அளித்தார்.
Tags:    

Similar News