ஒத்தக்கடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்  

சமயபுரம் அருகே ஒத்தக்கடையில் உள்ள மாரியம்மன் மற்றும் விநாயகர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் எம்எல்ஏ கதிரவன் பங்கேற்று தரிசனம் செய்தார்.

Update: 2024-02-27 05:57 GMT

ஆரத்தி எடுத்து வரவேற்பு 

திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி பகுதி ஒத்தக்கடையில் அருள்மிகு மாரியம்மன் மற்றும் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்ள ஒத்தக்கடை மாரியம்மன் கோவிலுக்கு எம்எல்ஏ கதிரவன் வருகை தந்தார். அப்போது கிராம பெண்கள் எம்எல்ஏ கதிரவனுக்கு உற்சாகமாக ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் பெரிய மாலை அணிவித்து கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கோயில் நிர்வாகம் சார்பில் எம்எல்ஏவுக்கு பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து   எம்எல்ஏ கதிரவன்  பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தார். இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர், சமயபுரம் ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள், இளைஞர் அணியினர் தகவல் தொழில்நுட்ப அணியினர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News