ராதாபுரம் அருகே பாதையாத்திரை பக்தர் சடலமாக மீட்பு

திருநெல்வேலி மாவட்டம், சீலாத்திகுளம் பகுதியில் திருசெந்தூர் பாதயாத்திரை சென்ற பக்தர் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-02-16 01:58 GMT

சடலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளம் சாலையில் ஆண் சடலம் கிடப்பதாக நேற்று பணகுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர் என்பதும் தெரிய வந்தது. மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News