தொடர் மழையால் நெல் நாற்றுகள் பாதிப்பு

Update: 2023-12-03 07:47 GMT

நெல் வயல் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சுற்றுவட்டாரத்தில் பெய்து வரும் கனமழையால் நெல் நாற்றுகள் தண்ணீரில் மூழ்கி விடுமோ என, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காடு, சின்னிவாக்கம், புத்தாகரம், கரூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில், சம்பா பருவ சாகுபடி பணிக்காக நெல் நாற்று உற்பத்தி செய்ய விதைகள் பதியம் போட்டுள்ளனர். பாதி அளவு வளர்ச்சி அடைந்துள்ள நெல் நாற்றுகளை, அடுத்த 20 நாட்களில், நாற்றங்காலில் இருந்து பிரித்து, நடவு செய்ய விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், சில தினங்களாக பெய்யும் பருவ மழையால், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. தொடர் மழை காரணமாக நாற்றங்கால் நிலப்பகுதிகள், நீரில் மூழ்கி நெல் நாற்றுகள் அழுகி போகுமோ என, விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News