பாலக்கோடு பேரூராட்சி குழுக் கூட்டம்

பாலக்கோடு பேரூராட்சி குழுக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-12-30 12:04 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

 தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக் குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 15-ஆவது நிதிக்குழு திட்டத்தில் பொது சுகாதார பயன்பாட்டிற்கு ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் வாகனம் வாங்கப்பட்டது

18 வார்டுகளில்.பழுதடைந்த சாலைகளையும், கழிவு நீர் கால்வாயை சீரமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்புவது, கொரோனா, டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் நடவடிக்கைளை மேற்கொள்வது,

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்தல், பாலக்கோடு பேருந்து நிலையத்தின் நுழைவாயில் மற்றும் வளைவு பகுதிகளில் 3 இடங்களில் வேகத்தடை அமைத்தல், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலைகளின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், 18 வார்டுகளிலும் விடுபட்ட குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்கி குடிநீர் விநியோகம் செய்தல் உள்ளிட்ட 13 தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News