கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் பழையசீவரம் அணியினர் முதலிடம்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பழையசீவரம் இன்பா கிரிக்கெட் கிளப் அணியினர் முதலிடம் பிடித்துள்ளனர்

Update: 2024-05-29 09:45 GMT

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பழையசீவரம் இன்பா கிரிக்கெட் கிளப் அணியினர் முதலிடம் பிடித்துள்ளனர்


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், 30 அணிகள் பங்கேற்ற மாபெரும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தன. இதில், பழையசீவரம் இன்பா கிரிக்கெட் கிளப் அணியினர் முதலிடம் பிடித்துள்ளனர். வாலாஜாபாத் ஜூஸ்பார்ட் அணியினர் இரண்டாவது இடமும், வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த மற்றொரு அணி மூன்றாவது இடமும் பிடித்துள்ளன. வாலாஜாபாத் வியாபாரிகள் சங்க நிர்வாகி அரிகுமார் முதலிடம் பிடித்த பழையசீவரம் இன்பா கிரிக்கெட் கிளப் அணியின் கேப்டன் சிலம்பரசனிடம் வெற்றி கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
Tags:    

Similar News