பள்ளிபாளையம் கோன் நூல் வியாபாரிகள் பொதுக்குழு கூட்டம்

பள்ளிபாளையத்தில் கோன் நூல் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது

Update: 2024-03-24 14:14 GMT

 நூல் வியாபாரிகள்

பள்ளிபாளையம் கோன் நூல் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டமானது ஆவரங்காடு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜானகிராமன், பொருளாளர் ஆர்.பி.சக்திவேல், செயலாளர் சம்பு, துணை செயலாளர் பச்சியப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் 2023, 2024 ஆம் ஆண்டுக்கான வேலை அறிக்கை வரவு செலவு சமர்ப்பிக்கப்பட்டது.  மேலும் இந்த கூட்டத்தில் , சங்கம் சார்பாக வருடத்திற்கு ஒருமுறை ரத்ததான முகாம் நடத்துவது, சங்கத்தை சேர்ந்த உறுப்பினரிடம் வேலை செய்யும் கோன் நூல் பிரிக்கும் வேலையாட்கள் வெளி இடங்களுக்கு மில்லுக்கு சென்று கோன் பிரிப்பதை தவிர்க்க வேண்டும் , தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், கோன்  மூட்டைகளை வெளியிடங்களுக்கு கொண்டு செல்லும் பொழுது உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்ல வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News