ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு

கச்சிராயபாளையம் அருகே பரிகம் கிராமத்தில் ரூ.23 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை உதயசூரியன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

Update: 2023-12-28 08:06 GMT

கட்டிட திறப்பு 

கச்சிராயபாளையம் அடுத்த பரிகம் கிராமத்தில் ரூ.23 லட்சம் மதிப்பிலான புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டட திறப்பு விழா  நடந்தது. விழாவிற்கு, ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகரன், மோகன்குமார் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் சஞ்சய்குமார் வரவேற்றார். விழாவில், உதயசூரியன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.
Tags:    

Similar News