பஞ்சாயத்து அலுவலக ஊழியர் தற்கொலை!

குளத்தூரில் மது பழக்கத்தை மனைவி கண்டித்தால் பஞ்சாயத்து அலுவலக ஊழியர் விஷம் குடித்து தற்காெலை செய்து கொண்டார்.

Update: 2024-06-01 07:28 GMT

பைல் படம்

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் மது பழக்கத்தை மனைவி கண்டித்தால் பஞ்சாயத்து அலுவலக ஊழியர் விஷம் குடித்து தற்காெலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அண்ணா காலனியைச் சேர்ந்தவர் பிச்சைமணி மகன் முத்துராஜ் (40). இவர் குளத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் சுகாதார பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் மது குடித்துவிட்டு வந்ததால் அவரது மனைவி முத்துலட்சுமி திட்டினாராம். இதில் மனமுடைந்த முத்துராஜ் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News