பங்குனி உத்தரம் விழா; பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கல்

ஆத்தூர் சேவை சங்கம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் பங்குனி உத்திர விழாவுக்கு செல்லும் பக்தர்களுக்கு நீர் மோர் பந்தல் அமைத்து அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2024-03-25 09:51 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் பல்வேறு சேவைத் திட்டங்களை பொதுமக்களுக்காக செயல்படுத்தி வரும் சேவை பணியில் ஈடுபட்டு வரும் ஆத்தூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதியிலிருந்து வரும் கிராம பொதுமக்கள் கோவில்களுக்குச் சென்று திரும்பும் நிலையில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ள சங்கத்தின் சார்பில் கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், மோர் ,அன.னதானம். போன்றவைகள் பக்தர்களுக்கு வழங்கினார்கள். இந்நிகழ்வில் ஆத்தூர் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் சாசன தலைவர், ரோட்டரி துணை ஆளுநர், உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News