ஆத்தூர் : முத்துமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்று விழா

ஆத்தூர் அருகே புத்திர கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள 146 அடி உயரமுள்ள அருள்மிகு முத்துமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கணபதி ஹோமம் செய்து கொடி மரத்தில் கொடி ஏற்றி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

Update: 2024-03-22 06:25 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புத்திரகவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமலை முருகன் கோவிலில் வருகின்ற 25ந்தேதி பங்குனி உத்திர திருத்தேர் விழா நடைபெற உள்ள நிலையில் அங்குள்ள கொடி மரத்தில் கொடியேற்றியேற்றப்பட்டு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியதை யடுத்து அருள்மிகு ஸ்ரீ முத்துமலை முருகன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் அதைத்தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ முத்துமலை முருகன் மற்றும் அங்குள்ள மூலவர்களுக்கும் மகாதீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ முத்துமலை முருகனை தரிசித்தனர்.
Tags:    

Similar News