சிவகாசி அருகே முடங்கி கிடக்கும் பொது சுகாதார வளாகம்

சிவகாசி அருகே பயன்பாடு இன்றி பொது சுகாதார வளாகம் முடங்கி கிடக்கிறது.

Update: 2024-06-03 14:37 GMT

சிவகாசி அருகே பயன்பாடு இன்றி பொது சுகாதார வளாகம் முடங்கி கிடக்கிறது.


விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டலம் 22 வது வார்டு ராதாகிருஷ்ணன் காலனியில் பொது சுகாதார வளாகம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது.இந்த பொது சுகாதார வளாகம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் கட்டாமல் சிவகாசி-விருதுநகர் மெயின் ரோட்டில் கட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பயன்பாடு இன்றி ஆரம்பம் முதலே காட்சி பொருளாகவே காணப்பட, செயல்படாத இந்த சுகாதார வளாகம் அவ்வப்போது மராமத்து செய்யப்படுவதும் வழக்கமாக நடைபெற்றன,கடந்த பல ஆண்டுகளாகவே இந்த சுகாதார வளாகம் முற்றிலும் பயன்படுத்த பட முடியாத நிலையில் காணப்படுகின்றது.

தற்போது பொதுசுகாதார வளாகத்தை சுற்றிலும் முள் செடிகள்,புல் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் பாம்புகள்,விஷ வண்டுகள் அதிகமாக நடமாட்டம் உள்ளது.இதனால் பொதுமக்கள் இந்த சுகாதார வளாகத்திற்கு பகலில் வருவதற்கே மிகவும் அச்சமடைகின்றனர் இந்த பொது சுகாதார வளாகம் பயன்பாடு இன்றி புதர்மண்டி கிடப்பதால் பொதுமக்கள் அந்தப் பகுதியில் உள்ள சாலைகளை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் சுகாதார சீர்கேடு நிலவுகின்றது.பொதுமக்கள் நலம் பெறுதி சுகாதார வளாகத்தை மராமத்து செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News